Tuesday, August 24, 2010

24 Aug 10



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிராத்தனை என்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் சங்கல்பம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விட்டு கொடுத்து வாழ்வதே இயற்கையின் நீதி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
If you want to receive love give love.  If you want to receive money tithe money.
If you want to be wealthy, you must give about 10% of what you earn for charitable 
and Spiritual purpose.  This will generate prosperity karma-GMCKS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

20 comments:

ஜெய்லானி said...

ஐ இன்னைக்கு வடை எனக்குதான்

ஜெய்லானி said...

//விட்டு கொடுத்து வாழ்வதே இயற்கையின் நீதி.//

பிறகு எல்லாவற்றையும் இவ்வுலகில் விட்டு விட்டே போகவேண்டும்

:-))

ஜெய்லானி said...

//If you want to receive love give love. //

இதில் என்னுடைய பதில் ஒன்றே தான் அது “ அன்பை ஒரு முறை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை உன்னிடம் திரும்ப வரும் “

ஹைஷ்126 said...

நன்றி ஜெய், ஆம் ஒரு நெல் மணியை நாம் விதைத்தால் இந்த பூமாதேவி பல நெல்மணிகளை திருப்பி தருவாள்.

This is called LAW OF KARMA

இமா க்றிஸ் said...

//If you want to receive love give love.//
Good one Haish.

ஹைஷ்126 said...

அன்பு இமா அதுதானே இயற்கையின் விதி :) மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

athira said...

//விட்டு கொடுத்து வாழ்வதே இயற்கையின் நீதி.///// அதனால்தான் ஹைஷ் அண்ணன், இண்டைக்கு ஜெய் க்கு வட யை விட்டுக்கொடுத்தேன், இதிலிருந்து புரிஞ்சுகொள்ளுங்கோ அதிராபற்றி:))).

//If you want to receive love give love.// /// அன்பைக்கூட, பலனை எதிர்பார்த்துத்தான் கொடுக்கிறாங்கோ....

ஹைஷ் அண்ணன், அன்பைக் கொடுத்தால், அன்பு மட்டும்தான் திரும்பக் கிடைக்குமோ?

இளமதி said...

சகோதரர் ஹைஷ்!

//பிராத்தனை என்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் சங்கல்பம்.//

ஒரு விஷயத்திற்காக நாம் இறைஅருளை வேண்டுவது பிரார்த்தனை ஆகும். அதுவே எப்படி சங்கல்பம் ஆகும்?

சங்கல்பம் என்னும்போது உறுதி எடுத்துக்கொள்வது என்றுதானே பொருள்படுகிறது.

நமக்கு நாமே செய்துகொள்ளும்போது பிரார்த்தனை சங்கல்பமாகிறதா?

அதிரா!

எங்கும் எதிலும் அன்பு நிறைந்துவிட்டால் எல்லாம் அன்பு மயமே. பிறகு கொடுக்கவும் வாங்கவும் தேவையில்லையே......

ஜெய்லானி said...

//அதிரா!

எங்கும் எதிலும் அன்பு நிறைந்துவிட்டால் எல்லாம் அன்பு மயமே. பிறகு கொடுக்கவும் வாங்கவும் தேவையில்லையே......//


எனக்கு அழுகை அழுகையா வருது..அவ்வ்வ்வ்வ்வ்

முற்றும் அறிந்த அதிரா said...

யங்மூன்.... ”உஞ்சி பாக வந்து”,

ஹைஷ் அண்ணன் ஒரு ஆசையில சொல்லிடேன்... இந்தச் சிங்களத்தில் ஏதும் தப்பிருந்தால் திருத்திவிடுங்கோ... உங்களுக்கு இப்பாஷை தெரியுமென நினைக்கிறேன் அல்லது ஆராவது.. யெல்ப் பிளீஸ்ஸ்ஸ்.

யங்மூன்..,அன்பைக் கொடுத்தால், வாங்கி வைக்கிறார்கள், ஆனால் கேட்டால் த்ருகினமில்லையே... ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்?

முற்றும் அறிந்த அதிரா said...

எனக்கு அழுகை அழுகையா வருது..அவ்வ்வ்வ்வ்வ்/// ஜெய்.... உதுக்கெல்லாம் அழுவக்கூடாது, ஸ்ரெடியா இருக்கோணும்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:), வடயத்தான் நான் விட்டுத்தந்திட்டனே:)), இன்னும் எதுக்கு?:))).

இளமதி said...

///யங்மூன்.... ”உஞ்சி பாக வந்து”,///

அதிரா! என்னதிது? புரியாத மொழியில் சொல்லுறீங்கள்.(என்னை ஏதும் கோபத்தில திட்டலைதானே).........

///அன்பைக் கொடுத்தால், வாங்கி வைக்கிறார்கள், ஆனால் கேட்டால் த்ருகினமில்லையே... ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்?///

நீங்கள் கொடுத்ததில் (அன்பை) ஒன்றும் குறைபாடில்லைதானே. அவர்களுக்கு திருப்பித்தருவதில்தான் சிக்கல். அதாவது நீங்கள் தந்தளவிற்கு திருப்பித்தர முடியாமல் அவர்களிடம் இருக்கும் அன்பு குறைவாம். அதுதான். கேட்டும் கிடைக்கவில்லை.
சரி, எனக்கு மட்டும் சொல்லுங்கோ. நீங்கள் கேட்டும் தராத அந்த ................... யார்?

வாருங்கள் ஜெய் லானி!

அன்பைப்பற்றி சொன்னதுக்கு நீங்கள் ஏன் அழணும்? அன்பு எல்லோரிடமும் நிறைய இருக்குதென்று சந்தோஷப்படுங்கோ!
கொடுக்கவும் வாங்கவும் ஆள் இல்லை என்று அழுறீங்களோ?.....கொடுப்பதற்கு உங்களிடம் நிறைய அன்பு இருக்குதெண்டால் யாராவது இல்லாதவர்கள் கட்டாயம் வாங்குவார்கள். வருவார்கள். கவலையை விடுங்கள்:)

ஹைஷ்126 said...

அன்பு தங்கை அதிரா நாம் ஏன் நிலத்தில் விதை விதைக்கிறோம் உணவை எதிர்பார்த்துதானே?

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி இளமதி இறைவனும் நாமும்(அறிவும்) வேறு வேறு அல்ல இரண்டும் ஒன்றுதான். அதன் உள்ளார்த்த பொருள் வேண்டும் என்றால் உடல், ஜீவன், ஆத்மா என பல பொருள் படலாம். பிறகு நேரம் கிடைக்கும் போது விளக்கமாய் எழுதுகிறேன். இந்த வலைப்பூவே தானியங்கி வலைப்பு நான் பதில் எழுத நினைத்து உருவாக்கவில்லை:(

ஹைஷ்126 said...

அன்பு தங்கை அதிரா உங்களில் கேள்விலேயே பதிலும் இருக்கிறது. அதாவது பள்ளத்தை நோக்கிதான் தண்ணீர் பாயும் (Law of nature)அந்த பள்ளத்தில் ஏற்கனவே தண்ணீர் இருந்தால் அதில் எப்படி புதிய நீர் நிரம்பும்.

அதைதான் இறைக்கிற கிணறுதான் ஊறும் என சொல்வார்கள்.

Law of Karma நீங்கள் எவ்வளவு கொடுக்கிறீகளோ அவ்வளவு வட்டியுடம் திரும்ப வரும், அது உறுதி எப்போது வரும் என்பதுதான் மனிதனின் எதிர்பார்ப்பு ஆனால் கண்டிப்பாக வரும் அவன் மனம் பக்குவம் அடைந்தவுடன் :)))

ஜெய்லானி said...

//எப்போது வரும் என்பதுதான் மனிதனின் எதிர்பார்ப்பு ஆனால் கண்டிப்பாக வரும் அவன் மனம் பக்குவம் அடைந்தவுடன் :)))//

அப்போது மனிதனுக்கு எந்த தேவையும் இருக்காது..

ஹைஷ்126 said...

:)

athira said...

ஹைஷ் அண்ணன்,உண்மையிலேயே உங்கள் பதில் பார்த்துப் புல்லரிக்கிறது. கிழக்கு நோக்கிப் போனால், அப்படியே தூக்கி, மேற்கே நட, இதுதான் சரியான பாதை என்பதுபோல பதில் கொடுக்கிறீங்கள். உண்மையிலேயே நீங்கள் எங்களைவிட மேலே:) தான்.
விளக்கமான பதில்களுக்கு மிக்க நன்றி

athira said...

யங்மூன்.... உப்பூடித் தூர நிண்டால், எப்பூடிப் பதில் சொல்றது? கிட்ட வாங்கோ சொல்றேன்:)).

athira said...

ஹைஷ்126 said... 17
:)

August 26, 2010 3:27 AM
//// யூ ரூ ஹைஷ் அண்ணன்???, வேண்டாம் இந்தப் பயக்கம் உங்களுக்கு வேண்டாம் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், நீங்களாவது என் சொல்லுக் கேளுங்கோ.

Post a Comment